சென்னையில் தவெக நிர்வாகிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் திமுகவின் தோல்வி பயத்தை காட்டுவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், திமுகவினர் நடத்திய தாக்குதலில் 4 மாதக் கர்ப்பிணி உட்பட 2 நிர்வாகிகள் படுகாயமடைந்ததாக கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்களிடையே பெருகி வரும் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆளும் கட்சியினர் இத்தகைய வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல் என விமர்சித்துள்ள விஜய், இந்த தாக்குதல் திமுகவின் தோல்வி பயத்தை காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
















