நாடு தழுவிய போராட்டத்தை மீறி சென்னையில் வழக்கம்போல் பேருந்துகள் இயங்குவதால் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை என பயணிகள் தெரிவித்துள்ளனர்.
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்ததால், பேருந்துகள் இயக்கப்படாது என மக்கள் அச்சத்தில் இருந்தனர்.
ஆனால் பணிக்கு வரவில்லை எனில் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என No Work, No Pay முறையை அரசு அறிவித்திருந்தது.
இதனால் போக்குவரத்து தொழிலாளர்கள் வழக்கம்போல் பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.
மேலும் பேருந்து போக்குவரத்து சீராக இருப்பதால் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என பயணிகள் தெரிவித்துள்ளனர்.
















