சேலம் மாநகர் பகுதியில் உள்ள 5 டாஸ்மாக் பார்களில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.
சேலம் சூரமங்கலம் பகுதியில் முத்தழகு என்பவர் வசித்து வருகிறார். திமுக பிரமுகரான இவர் புதிய பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள 5 டாஸ்மாக் கடைகளில் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெயரில் பார் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இங்கு 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் பாட்டிலுக்கு 50 முதல் 100 வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















