மகா கும்பமேளாவால் பிரபலமான மோனலிசா, தனது முதல் படத்தின் சம்பளத்தில் பள்ளிக்கூடம் கட்டவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மகா கும்பமேளாவில் வீதி வீதியாக பாசிமணி மாலை விற்றுக் கொண்டிருந்தவர் மோனலிசா. இவரது கண்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானார்.
இவர் தற்போது ஒரு இந்தி மற்றும் 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
இதுகுறித்து பேட்டி அளித்துள்ள மோனலிசா, திடீரென்று கிடைத்த புகழ் மூலம் தனக்கு பொறுப்பும் வந்திருப்பதாக கூறியுள்ளார். மேலும், சொந்த ஊரில் பெண்களுக்கான பள்ளியை கட்ட முடிவு செய்திருப்பதாகவும் மோனலிசா தெரிவித்துள்ளார்.
















