சூலூர் அருகே மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட குடிநீர் தொட்டி ஒன்று, 6 ஆண்டுளாக காட்சிப் பொருளாக மட்டுமே காட்சியளிக்கிறது… குடிநீர் வசதிசெய்துதர வேண்டி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்கிறார்கள் குடியிருப்புவாசிகள்.. காரணம் என்ன…?
கோவை மாவட்டம் சூலூர் அருகே காடம்பாடி ஊராட்சியிலுள்ள இந்தப் பகுதிதான் டிபென்ஸ் காலனி….முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் 200-க்கும் மேற்பட்டோர் இப்பகுதியில்தான் வசித்து வருகின்றனர்… இங்கு கடந்த 2019ம் ஆண்டு 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தரைமட்ட நிலத்தொட்டி கடந்த 6 ஆண்டுகளாகப் பயன்பாடின்றி வீணாகி வருகிறது.
ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின் அமைதியாக வாழ இங்கு வந்ததாகவும், ஆனால் ஒரு குடம் குடிநீருக்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் முன்னாள் ராணுவ வீரர்கள் கூறுகின்றனர்.
6 ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் இந்த குடிநீர் தொட்டியில் இருந்து ஒருசொட்டு நீர் கூட வழங்கப்படவில்லை எனக்கூறும் குடியிருப்புவாசிகள்,பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் பயனே இல்லை என்கிறார்கள்…
முறையான பராமரிப்பு இல்லாததால், குடிநீர் தொட்டியின் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும், பைப் லைன்கள் துருப்பிடித்தும் வருவதால் வரிபணம் வீணடிப்பட்டுவிட்டதாக கூறுகின்றனர்..
மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, காடம்பாடி டிபன்ஸ் காலனியில் முடங்கிக் கிடக்கும் குடிநீர் தொட்டியைச் சீரமைத்து, சீரான குடிநீர் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு…
















