தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சி, முதல்வர் ஸ்டாலின் அவர்களின் குடும்பத்திற்காக மட்டுமே நடக்கிறது. இந்த குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் ,
இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் கடந்த 5 ஆண்டுகளாக, தமிழக மக்களை அவதிக்குள்ளாகியிருக்கும் திமுக ஆட்சியை, அடியோடு அகற்றிட தமிழக மக்கள் முடிவெடுத்துள்ளனர். மக்களின் முடிவை, மக்களின் உரிமை குரலை எதிரொலிக்கும் வகையில் பட்டிதொட்டி எங்கும் பாஜக சார்பில் தெருமுனைக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என கூறியுள்ளார்
கரூர் மாவட்ட இளைஞர்களுக்கு சொந்த ஊரில் இன்று வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் வெளியே வேலை தேடி செல்கின்றனர். இப்பகுதியில் முருங்கைக்காய்த் தொழிற்சாலை அமைக்கப்படும் என வாக்குறுதி கொடுத்த திமுகவின் ஆட்சியே முடியப்போகிறது. இதுவரை எதுவும் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்
மேலும் தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சி, முதல்வர் ஸ்டாலின் அவர்களின் குடும்பத்திற்காக மட்டுமே நடக்கிறது. இந்த குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும். அதற்கு வருகின்ற சட்டசபைத் தேர்தல் ஒரு நல்ல வாய்ப்பு. திமுகவின் இந்த போலியான ஆட்சியை மக்கள் விரட்டியடிக்க வேண்டும் என கூறியுள்ளார்
தமிழகத்தில் ஒரு TNPSC தேர்வைக்கூட நடத்த முடியாத கையாலாகாத அரசாக திமுக அரசு உள்ளது. ஆனால், தமிழகம் வளர்ச்சி பெற்றுள்ளதாக கூச்சமின்றி முதல்வர் பொய் சொல்கிறார். திமுகவினர் கூறும் எந்த பொய்களையும் இனியும் தமிழக மக்கள் நம்பப்போவதில்லை. வருகின்ற தேர்தல் முடிவில், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் தேசிய ஜனநாயக கூட்டணியின் மக்களுக்கான நல்லாட்சி அமையப்போவது உறுதி என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
















