2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கே ராஜ்யம் கிடைக்கும் எனவும், திமுகவுக்கு பூஜ்யம்தான் கிடைக்கும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” சுற்றுப்பயணத்தில் பேசிய அவர், திமுக அரசின் திட்டங்களை பற்றி தன்னுடன் விவாதிக்க ஸ்டாலின் தயாரா? என கேள்வி எழுப்பினார்.
திமுக கூட்டணியை நம்பியே தேர்தலை சந்திக்கிறது என்றும், அதிமுக கூட்டணி வைத்திருந்தாலும் மக்களை நம்பியே தேர்தலை சந்திப்பதாகவும் அவர் கூறினார்.
அதிமுக தலைமையிலான NDA கூட்டணி வெற்றி பெற்று, அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் இபிஎஸ் கூறினார்.
கோடைகால சிறப்புத்தொகை என முதலமைச்சர் ஸ்டாலின் ஏமாற்ற பார்க்கிறார் என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் செய்யும் தவறுகளை கூட்டணி கட்சியினர் சுட்டிக்காட்டுவதில்லை என்றும் இபிஎஸ் கூறினார்.
















