தமிழகம் காணாத மோசமான ஆட்சியை 5 ஆண்டு காலத்தில் திமுக காட்டியுள்ளது - அண்ணாமலை!
Mar 15, 2026, 12:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகம் காணாத மோசமான ஆட்சியை 5 ஆண்டு காலத்தில் திமுக காட்டியுள்ளது – அண்ணாமலை!

Manikandan by Manikandan
Feb 26, 2026, 12:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், மத்திய அரசு கோவையை வஞ்சித்துவிட்டது என வாய்கூசாமல் பொய் பேசுகிறார் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் தமிழகத்தைத் தலைகுனியச் செய்த கையாலாகாத திமுக அரசுக்கு முடிவு கட்டவும், மீண்டும் நமது தாய் மண்ணை தலைநிமிர செய்யவும் மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் நடைபெற்று வரும் தெருமுனைப் பிரச்சார பொதுக்கூட்டங்களின் ஒரு பகுதியாக, இன்றைய தினம் மாலை, கோவை மாவட்டம் காளப்பட்டியில் உள்ள நேரு நகரில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன் என கூறினார்

இன்னும் 50 நாட்களில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலை தமிழகம் சந்திக்க இருக்கிறது எனவும் இதுவரை தமிழகம் காணாத ஒரு மோசமான ஆட்சியை கடந்த 5 ஆண்டு காலத்தில் திமுக நமக்கு காட்டியிருக்கிறது அண்ணாமலை தெரிவித்துள்ளார்

மேலும் 2006-11 வரையிலான திமுக ஆட்சி இருண்ட ஆட்சியாக இருந்தது. 2021 முதல் தற்போது வரையிலான திமுக ஆட்சி கொடுங்கோலாட்சியாக இருக்கிறது எனவும் தேர்தல் எப்போது வரும் என மக்களே காத்துக் கொண்டிருக்கிறார்கள். திமுகவை விரட்டியடிக்க மக்கள் தயாராகிவிட்டார்கள் என கூறினார்

சமீபத்தில், திமுக பாராளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன் அவர்கள், கோவை மக்களை இழிவுபடுத்திப் பேசினார். கொரோனா பெருந்தொற்றின் போது, திமுகவிற்கு வாக்களிக்காத கோவை மக்களுக்கு குறைந்தளவு தடுப்பூசி வழங்கி திமுக அரசு வஞ்சித்தது.

திமுகவிற்கு வாக்களிக்காத மக்களை, திமுக அரசு நடத்தும் விதம் இதுவே. கோவை பகுதியில் மட்டும், கடந்த 3 ஆண்டுகளில், 325 நூற்பாலைகள் மூடப்பட்டுள்ளன. அதற்கு காரணம், நூற்பாலைகளுக்கான 1 யூனிட் மின்சாரத்தை திமுக அரசு ரூ.9.25-க்கு வழங்குவது தான். தொழில்வளம் நிறைந்துள்ள கோவையில் தொழிற்சாலைகளை வளர்க்க திமுக அரசு எதுவும் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்

2011 கோவை மக்கள் தொகையை கணக்கிட்டு கோவை மெட்ரோ திட்டத்திற்கு தவறான அறிக்கையைத் தயாரித்து கொடுத்தால் மத்திய அரசு எப்படி ஒப்புதல் வழங்கும்? மெட்ரோ பயணிகள் எண்ணிக்கை, மெட்ரோ இணைப்பிற்கான இடவசதிகள் உள்ளிட்ட தகவல்களை முறைப்படி வழங்காமல் அறிக்கை கொடுத்தால் ஒப்புதல் எப்படி கிடைக்கும்? ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், மத்திய அரசு கோவையை வஞ்சித்துவிட்டது என வாய்கூசாமல் பொய் பேசுகிறார்.

திமுகவின் மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவுகட்டும் தேர்தலாக வரும் சட்டமன்ற தேர்தல் அமையப்போவது உறுதி என அண்ணாமலை கூறியுள்ளார்

Tags: assemplycbe metrotamilnadubjpannamalaiDMKElectiontn bjpmkstalinCoimbatore metro rail
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் அடுத்தாண்டு தொடங்கப்படும் முதல் புல்லட் ரயில் சேவை – ஜப்பானில் ரயில்வே அதிகாரிகள் பயிற்சி!

Next Post

திருமண நிகழ்வில் மணமகள் மீது துப்பாக்கிச் சூடு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies