தமிழ்நாட்டில் மத்திய அரசு ஒதுக்கிய 9.5 லட்சம் வீடுகளில், 3 லட்சம் வீடுகளின் கட்டுமானம் நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய “Rising Bharat 2026” உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கு சில மாநிலங்கள் அரசியல் காரணங்களைக்காட்டி இடையூறு ஏற்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டினார்.
அதற்கு தமிழ்நாட்டை எடுத்துக்காட்டாகக் கூறிய அவர், பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 9.5 லட்சம் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் சுமார் 3 லட்சம் வீடுகளின் கட்டுமானம் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் இது ஏழை மக்களின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார். மேலும், மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக சென்றடைய வேண்டும் என்பதே தனது நோக்கம் எனவும், அரசியல் வேறுபாடுகள் காரணமாக திட்டங்கள் தாமதப்படக் கூடாது எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
















