பிரதமர் மோடி வருகையை ஒட்டி, புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டையில், சுமார் 2 ஆயிரத்து 700 கோடி மதிப்பிலான, உள்கட்டமைப்பு, நகர்ப்புறம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சேவைகளை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
பிரதமரின் வருகையை ஒட்டி, லாஸ்பேட்டை முழுவதும் மத்திய பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே புதுச்சேரி முழுவதும் நாளை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
















