பள்ளிபாளையம் அருகே திமுக முன்னாள் நிர்வாகி சட்டவிரோதமாக மதுபான கூடத்தை நடத்தி வருவதாகவும், கூடுதல் விலைக்கு மதுபானத்தை விற்று வருமானம் ஈட்டி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்த பெரியகாடு பகுதியில் திமுக முன்னாள் மாவட்ட தொண்டரணி நிர்வாகி அரசு அனுமதியின்றி அரை ஏக்கர் நிலத்தில் சட்டவிரோதமாக மதுபான கூடம் நடத்தி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த மதுபான கூடத்தில் விசைத்தறி கூலி தொழிலாளர்கள் தங்கள் சம்பாதிக்கும் பணத்தை செலவழித்து வருவதாகவும், மதுபாட்டிலுக்கு 4 மடங்கு விலை நிர்ணயித்து விற்று வருவதாகவும் கூறியுள்ளனர்.
போலி மதுபான கூடத்தில் அடிக்கடி அடிதடி பிரச்னைகள் ஏற்படுவதோடு, மது பிரியர்கள் அப்பகுதி வழியாக செல்லும் பெண்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், போலி மதுபான கூடத்தை நடத்தி வரும் நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் எனவும் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
















