தமிழக சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக சுமார் 600 ராணுவ வீரர்கள் சென்னை வந்தடைந்தனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஐந்து கம்பெனி ராணுவ வீரர்கள் சுமார் 500 பேரும், சிஆர்பிஎப் வீரர்கள் சுமார் 70 பேரும் சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் வந்தடைந்தனர்.
இவர்களில் இரண்டு கம்பெனி வீரர்கள் ஆவடிக்கும், இரண்டு கம்பெனி வீரர்கள் தாம்பரத்திற்கும். ஒரு கம்பெனி வீரர்கள் திருவள்ளூர் மற்றும் சென்னைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், மேலும் பல ராணுவ வீரர்கள் வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
















