திமுக அரசை வீட்டிற்கு அனுப்பி வைக்கும் கூட்டமாக திருச்சியில் நடைபெற கூடிய மாநாடு அமையும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்சி மக்கள் இதுவரை பார்க்காத பிரம்மாண்ட மாநாட்டை பார்க்க உள்ளதாக தெரிவித்தார். மதுராந்தகம் என்டிஏ கூட்டம் திமுகவிற்கு பயத்தை கொடுத்ததாகவும் அவர் கூறினார்.
மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் திமுக அரசை வீட்டிற்கு அனுப்பி வைக்கும் கூட்டமாக இது அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டிற்கு தேவையான அனைத்து நிதிகளையும் பாரத பிரதமர் மோடி வழங்கி உள்ளதாகவும்,. இன்று சுமார் 6 ஆயிரம் கோடி அளவுள்ள வளர்ச்சி திட்டங்களை தமிழகத்திற்கு மோடி வழங்கயுள்ளதாகவுல் எல்.முருகன் குறிப்பிட்டார்.
NDA கூட்டணிக்கு விஜய் வருவாரா என்ற கேள்விக்கு எல்லோரும் வருவார்கள் என பதில் அளித்தார்.
















