ஆப்கானிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களை இந்தியா கண்டிப்பதாக, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் தாக்குதலால் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதாகவும், பொதுமக்களின் உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ஆப்கானிஸ்தானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு முழுமையாக மதிக்கப்பட வேண்டும் என்பதை இந்தியா மீண்டும் வலியுறுத்துவதாக கூறியுள்ளார்.
















