கோவையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக காவல் அதிகாரியை கைது செய்து போலீசார் சிறையிலடைத்தனர்.
புதூரில் உள்ள தமிழ்நாடு 4ஆவது பட்டாலியன் படைப்பிரிவில் கமாண்டன்ட்டாக செந்தில்குமார் என்பவர் பணியாற்றி வந்தார்.
இவர் அங்கு பணிபுரியும் பெண்கள் மற்றும் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த மாதம் செந்தில் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் போத்தனூர் மகளிர் காவல் நிலையத்தில் செந்தில்குமார் மீது புகார் அளித்தனர்.
தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















