கரூர் துயர சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் சிபிஐ அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர்.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தவெக சார்பில் தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு குழந்தைகள் உட்பட 41 பேர் அடுத்தடுத்து பலியாகினர். இந்த சம்பவத்தை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். அதன் பேரில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆஜரானார். தொடர்ந்து அவரிடம் தவெக நிர்வாகிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அடிப்படையில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
















