தமிழகத்தின் சுகாதார கட்டமைப்புகளை திமுக அரசு 5 ஆண்டுகளில் சீரழித்து விட்டதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள அவர், திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாத காரணத்தால் நான்கரை வயது சிறுவன் உயிரிழந்ததாக வேதனை தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கே மருத்துவ தலைநகரமாக விளங்கும் தமிழகம், கடந்த 5 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதை விட்டுவிட்டு, எப்படி பணம் ஈட்டலாம் என அமைச்சர்கள் நினைப்பதே இதுபோன்ற சம்பவங்கள் நிகழ காரணம் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
















