கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக உள்ளது எனவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
பாஜக எத்தனை இடங்களில் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என்றும், என்டிஏ கூட்டணியில் புதிய கட்சிகள் இணைவது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றும் அவர் கூறினார்.
கூட்டணி தொடர்பாக தவெக தலைவர் விஜய் உடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றும் நயினார் உறுதிபட தெரிவித்தார்.
















