அமைச்சர் பதவி வேண்டாம் என்று ஒப்புக்கொண்டால் மட்டுமே, இந்த முறை சீட் வழங்கப்படும் என அமைச்சர் துரைமுருகனுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காட்பாடி தொகுதியில் கடந்த 1996 முதல் தொடர்ச்சியாக ஆறு முறை எம்எல்ஏவாக இருந்து வரும் துரைமுருகன், கருணாநிதி ஆட்சியில் பல்வேறு துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். சட்டசபையில் காரசாரமாக எழும் விவாதங்களை கூட கலகலப்பாக மாற்றி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை சாந்தப்படுத்தும் திறனுள்ள துரைமுருகன், சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
இதனிடையே, சட்டமன்ற தேர்தலில் துரைமுருகனுக்கும் சீட் வழங்க திமுக தலைமை மறுத்ததாகவும், இதனை கேட்ட துரைமுருகன் தனது சமுதாய ஓட்டுகள் திமுகவுக்கு கிடைக்காது என எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிகிறது.
இதனை தொடர்ந்து, துரைமுருகனுடன் துணை முதலமைச்சர் நடத்தி பேச்சுவார்த்தையின் அடிப்படையில், அவருக்கு சீட் வழங்க திமுக தலைமை முன்வந்துள்ளதாக தெரிகிறது. ஆனால், கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் துரைமுருகனுக்கு அமைச்சர் பதவி கிடையாது என்ற நிபந்தனையை திமுக விதித்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
















