சேலத்தில் தாய் மற்றும் பெண் குழந்தையை கடத்தி சென்று ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டிய திமுக நிர்வாகியின் செயலுக்கு, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்,
அன்னதானப்பட்டியில் நிலத்தகராறு காரணமாக பெண் மற்றும் அவரது மகளை திமுக நிர்வாகி செந்தூர் கார்த்தி என்பவர் கடத்தி சென்று ஆபாசமாக புகைப்படங்கள் எடுத்த சம்பவம் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.
ஆளுங்கட்சி என்ற மமதையில் பெண்கள் மற்றும் குழந்தைகளை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டியிருப்பது வெட்கக்கேடான செயல் என தெரிவித்துள்ள அண்ணாமலை
இது போன்ற சமூக விரோதிகளால் தான் தமிழகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது என கூறியுள்ளார்.
மேலும், சமூக அமைதிக்கும், பெண்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் திமுகவை முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என பதிவிட்டுள்ள அண்ணாமலை,
திமுகவினரால் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குழந்தைக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல்துறையை வலியுறுத்தியுள்ளார்
















