தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்களுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று ஆலோசனை நடத்துகிறார்…
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் இன்று சென்னை வருகிறார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன…
















