தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு பா.ஜ.க நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மத்திய அமைச்சரும். தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் மத்திய அமைச்சர் எல்.முருகனும் உடன் வந்திருந்தார். இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து பியூஷ் கோயல், தனியார் நட்சத்திர விடுதிக்கு சென்றார்.
















