திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் வெறுப்பில் உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழல்வாத, தமிழுக்கு எதிரான ஸ்டாலின், உதயநிதியின் அரசு முடிவுக்கு வரும் என தெரிவித்தார்.
தீய சக்தியான திமுக, அதன் கூட்டணி கட்சிகளுக்கு எதிரான போரை தொடங்கியுள்ளோம் என்றும், திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியின் மீது மக்கள் வெறுப்பில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
மகாராஷ்டிரா, ஹரியானா, பீகார், டெல்லி என காங். கூட்டணியை மக்கள் புறக்கணித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
“தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு மக்கள் தயாராக உள்ளதாகவும் பியூஷ் கோயல் குறிப்பிட்டார்.
















