புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் 514 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், மே 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் கடந்த 16ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,
கடைசி நாளில் என்ஆர் காங்கிரஸ், பாஜக, திமுக, காங்கிரஸ், அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 442 பேர் என மொத்தம் 514 மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெறவுள்ளதாகவும், வரும் 26ஆம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் எனவும் கூறியுள்ளார்.
மேலும், மார்ச் 26ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு சுயேட்சைகளுக்கு தனி சின்னம் ஒதுக்கப்படும் எனவும் மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
















