ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொள்ள வருகை தந்தார்.
அப்போது, என்டிஏ கூட்டணியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனை தொடர்ந்து, அந்த பகுதியில் உள்ள மக்களிடம் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், கம்ம சமுத்திரம் ஊராட்சி பகுதியில் இளைஞர்களின் உடல் தகுதிகளை மேம்படுத்த விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.
மேலும், அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஈஸ்வரன் கோயிலை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும், வாடகை கட்டடத்தில் இயங்கும் நியாய விலை கடைக்கு நிரந்தர கட்டடம் கட்டி தரப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
















