தென்காசி அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பரப்புரை வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமுரளியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தொகுதி வேட்பாளர் கடம்பூர் ராஜுவை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக சாலை மார்க்கமாக வாகனத்தில் சென்றார்.
தென்காசி மாவட்ட கிழக்கு எல்லை பகுதியான கரட்டுமலை சோதனை சாவடியில், எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
வாகனத்தில் எதுவும் சிக்காத நிலையில் தொடர்ந்து பிரச்சார பயணம் மேற்கொள்ள பறக்கும் படையினர் அனுமதி அளித்தனர்.
















