தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 3 மடங்கு குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தருமபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
தருமபுரி அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் தருமபுரி சட்டமன்ற தொகுதியின் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், திமுகவால் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.
















