திருப்போரூர் எம்எல்ஏ தொழில் நிறுவனங்களிடம் மிரட்டி பணம் பறித்ததாக பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்போரூர் கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் பாலு சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருப்போரூர் எம்எல்ஏ கட்டப்பஞ்சாயத்து செய்து தொழில் நிறுவனங்களிடம் பணம் பறித்ததாக குற்றம் சாட்டினார்.
மேலும் தான் வெற்றி பெற்றால் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
















