பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் "என் மண் என் மக்கள்"-- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜூலை 28 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் .
Feb 6, 2026, 11:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் “என் மண் என் மக்கள்”– மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜூலை 28 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் .

அண்ணாமலை நடைபயணத்தில் இடம்பெற உள்ள மக்கள் புகார் பெட்டியை அறிமுகம் செய்து பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

Sivasubramanian P by Sivasubramanian P
Jul 20, 2023, 03:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊழலுக்கு எதிரான பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ‘என் மண், என் மக்கள்’ – பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ் முழக்கம் நடைபயணத்தை வரும் 28ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,
இராமேஸ்வரத்தில் தொடங்கி வைக்கிறார். இந்த நடைபயணத்தில் இடம்பெற உள்ள புகார் பெட்டியின் அறிமுக விழா சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. கட்சியின் மூத்த நிர்வாகிகளான பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், வி.பி. துரைசாமி, உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்று ‘விடியல, முடியல’ எனும் வாசகத்துடன் கூடிய  மக்கள் புகார் பெட்டியை அறிமுகம் செய்துவைத்தனர்.

அண்ணாமலையின் நடை பயணத்தின்போது இந்த புகார் பெட்டியும் இடம்பெற்றிருக்கும் எனவும், ஊழல், சட்டம் ஒழுங்கு , கள்ளச்சாராயம், கட்டப் பஞ்சாயத்து, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது உள்ளிட்ட புகார்களை பொதுமக்கள் அப்பெட்டியினுள் வழங்கினால் அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி,

“ஊழலற்ற நேர்மையான தூய்மையான அரசாங்கம் வர வேண்டும் என்ற அரசியல் மாற்றத்தை தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் வரும் 28ம் தேதி முதல் தொடங்குகிறது. ஊழலற்ற அரசாங்கம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர வேண்டும், பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால சாதனையை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து , பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக  கூட்டணியின் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் இந்த நடைபயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

திமுகவின்ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சியின் அவலத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதும் இந்த நடைபயணத்தின் இலக்கு .

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரத்தில் தொடங்கி வைக்கிறார். அன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ‘இராமேஸ்வரத் தீர்மானங்கள்’ வெளியிடப்படும். தமிழக பாஜக எந்த திசை, இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும், எப்படியான வெற்றியை பெற வேண்டும் என்ற சிந்தனையுடன் அந்த தீர்மானங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நடைபயணம் 39 நாடாளுமன்ற தொகுதிகள் , 234 சட்டமன்ற தொகுதியையும் கடந்து செல்லும். ஒவ்வொரு நாளும் பாதயாத்திரை மூலமாகவும், வாகனம் மூலமாகவும் அண்ணாமலை மக்களை சந்திப்பார்.

நடைபயணத்தின் இடையே தமிழுக்கும் தமிழகத்துக்கும் பிரதமர் நரேந்திர மோடி  என்ன செய்தார் என்பது குறித்த 10 லட்சம் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. 1 கோடி குடும்பங்களுக்கு அண்ணாமலையின் கடிதம் அனுப்பப்பட உள்ளன. தமிழ்தாயின் சிலை வைக்க தமிழகம் முழுவதும் நடைபயணம் செல்லும் ஊர்களில் புனித மண் சேகரிக்கப்படும்.

அண்ணாமலை மேற்கொள்ளும் நடைபயணத்தின் இடையே மத்திய அமைச்சர்கள், பாஜகவின் தேசிய தலைவர்கள் 11 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேச உள்ளனர்.

 

அண்ணாமலை நாள்தோறும் கிராம சபை நிகழ்ச்சியின் மூலமாக  மக்களின் குறைகளைக்  கேட்டறிவார், அவற்றை சரிசெய்யும் நடவடிக்கைகளை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடைபயணம் நிறைவடையும்போது தமிழகத்தில் மாபெரும் அரசியல் திருப்புமுனை ஏற்படும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள  39 நாடாளுமன்றத்  தொகுதிகளிலும் பாஜக  வெற்றியை கைப்பற்றும் வகையில் திருப்புமுனை ஏற்படும்.

1967 முதல் நடக்கும் திமுகவின் தவறான ஆட்சிமுறைக்கு எதிராக அரசியல் மறுமலர்ச்சியை இந்த யாத்திரை ஏற்படுத்தும். இதை கட்சி யாத்திரையாக கருதாமல், தமிழக மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் யாத்திரை வருகிறது எனும் சிந்தனையுடன் தமிழக மக்கள் திருவிழா போல வரவேற்க வேண்டும். புதிய அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தும் இந்த யாத்திரைக்கு ஒட்டுமொத்த தமிழகமும் ஆதரவு தர வேண்டும். இது கட்சிக்கானது அல்ல, 8 கோடி தமிழர்களுக்கானது.

நீங்கள் கேட்பதைப் போன்று அதிமுகவிடம் எங்கள் பலத்தை காட்டுவதற்கான யாத்திரை அல்ல இது, 1967 முதல் தமிழக மக்கள் எப்படி ஏமாற்றப்படுகின்றனர் என்பதை கொண்டு சேர்க்கும் வகையில் அமையும்.

எங்கள் நடைபயணத்தால் எங்களுக்கு ஆதரவு பெருகத்தான் செய்யும், பாஜக பலம் பெற வேண்டும் என்பதே எங்கள் கருத்து. பாஜக பலம் பெறுவதை வரவேற்கதான் செய்வோம்.

உலகிலேயே கடல் பாசியில் அல்வா செய்வோம் என்ற வாக்குறுதியைக்  கொடுத்த கட்சி திமுக.

இராமநாதபுரம் மட்டும் அல்ல, 543 தொகுதியிலும் மோடி போட்டியிட வேண்டும் என மக்கள் விரும்பலாம், ஆனால் அவர் போட்டியிடும் இடத்தை பாஜக தலைமைதான் முடிவு செய்யும். ராகுல் காந்தியின் நடை பயணத்தை விட பல மடங்கு பலம் பொருந்தியதாக அண்ணாமலையின் நடைபயணம் அமையும்.

இவ்வாறு முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

Tags: k Annamalai Bjpbjp
ShareTweetSendShare
Previous Post

மணிப்பூர் விவகாரம் – எதிர்க்கட்சிகள் அமளி-நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை வரை ஒத்தி வைப்பு

Next Post

மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட நபர்களில் ஒருவர் கைது- மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்

Related News

காங்கிரசை கழற்றி விடுகிறதா திமுக..? – வெளியான தகவல்

நரிக்குறவரின குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் – நெல்லையப்பர் கோயிலில் தங்கத் தேரை இழுக்க வைத்து கௌரவித்த பாஜகவினர்

ரூபியோவை சந்தித்த அஜித் தோவல் – ட்ரம்பை மிரட்டிய மோடி அடிபணிந்த அமெரிக்கா!

ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் மோடி -நயினார் நாகேந்திரன் தகவல்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான வர்த்தகம் ஒப்பந்தம் எப்போது நடைமுறைக்கு வரும்? – அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம்!

கருணாநிதி கொண்டு வந்த அரசாணை எண் 354- ஐ ஸ்டாலின் நடைமுறைப்படுத்த வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்!

காழ்ப்புணர்ச்சி கண்ணை மறைக்க மாபெரும் வரலாற்றுப் பிழையை இழைத்துள்ளது காங்கிரஸ் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

பள்ளி மாணவர்களை பாழுங்குழியில் தள்ளிய அறிவாலய அரசு நாட்டிற்கே கேடானது – நயினார் நாகேந்திரன்

மதுரையில் வீட்டுமனையை மிரட்டி வாங்கியதாக பிடிஆர் பழனிவேல் ராஜனின் முன்னாள் உதவியாளர் கைது!

வேதாரண்யம் அருகே கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட தாய்!

சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க முடியாது – சென்சார் போர்டு

சங்கரன்கோவிலில் சாலை மறியலின் போது போட்டோ ஷூட் நடத்திய எம்எல்ஏ – பொதுமக்கள் கொந்தளிப்பு!

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் என்டிஏ பொதுக்கூட்டம் – நயினார் நாகேந்திரன் ஆலோசனை!

மதுரையில் பிப்ரவரி 28-ம் தேதி நடைபெறும் என்டிஏ கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies