தமிழகத்தில் 21 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவு- டிஜிட்டல் சாதனங்கள் முக்கிய ஆவணங்கள் செல்போன்கள் சிம்கார்டுகள் பறிமுதல்
Sep 14, 2026, 02:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

தமிழகத்தில் 21 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவு- டிஜிட்டல் சாதனங்கள் முக்கிய ஆவணங்கள் செல்போன்கள் சிம்கார்டுகள் பறிமுதல்

தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Murugesan M by Murugesan M
Jul 23, 2023, 09:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகம் முழுவதும் 21 இடங்களில் திருப்புவனம் ராமலிங்கம் கொலை தொடர்பாக, என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனைகளில் ஈடுபட்டனர். நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முபாரக் வீட்டிலும் காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திருப்புவனம் ராமலிங்கம் கொலை தொடர்பாக கும்பகோணம் திருப்புவனம் திருமங்கலக்குடி பாபநாசம் உள்ளிட்ட ஏழு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

சமீபத்தில் கேரளாவை சேர்ந்த ஆசிப் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். சில மத தலைவர்களைக் கொலை செய்யும் நோக்கில் சதி திட்டங்கள் தீட்டப்பட்டதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். அதன் அடிப்படையிலும் தமிழகத்தில் தஞ்சை மதுரை நெல்லை திருப்பூர் விழுப்புரம் கும்பகோணம் திருச்சி கோவை உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தப்பட்டு வருவதாக முதல் கட்ட தகவலில் தெரியவந்தது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட என்ஐஏ சோதனைகள் தற்போது நிறைவு பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. இந்த சோதனையின் முடிவில் ஹார்ட் டிஸ்க், செல்போன்கள், சிம்கார்டுகள், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக
என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் 18 நபர்கள் மீது என்ஐஏ அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதில் 5 பேர் இன்னும் பிடிப்படாமல் தலைமுறைவாக இருந்து வருகின்றனர்.

அவர்களைப் பிடிப்பதில் என்ஐஏ அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் அதன் அடிப்படையில் இன்று தஞ்சாவூர், மதுரை,நெல்லை, திருப்பூர், விழுப்புரம், திருச்சி, கோவை உள்ளிட்ட 21 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். தற்போது தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: ani
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவில் மாநிலங்களிடையே பிளவை ஏற்படுத்துவதில் முதன்மையான கட்சி திமுக தான்- பாஜக மாநில தலைவர் கு. அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

ஊழலில் திளைத்தவர்கள் ஒரு குழுவாக ஒன்றிணைந்துள்ளனர்- குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் குற்றச்சாட்டு

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies