மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை: வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கி இருக்கிறேன்: பிரதமர் மோடி பெருமிதம்!
Nov 16, 2025, 03:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை: வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கி இருக்கிறேன்: பிரதமர் மோடி பெருமிதம்!

Web Desk by Web Desk
Aug 15, 2023, 04:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தார்கள். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கி இருக்கிறேன் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் மூவர்கணக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பாரத பிரதமர் மோடி, “உறுதியான இந்தியா தனக்கான பணிகளை சிறப்பாக நிறைவேற்றி வருகிறது. புதிய நாடாளுமன்றம் கட்டுவது தொடர்பாக முந்தைய அரசு கடந்த 25 ஆண்டுகளாக விவாதித்து வந்தது. ஆனால், தற்போதைய அரசு அதை கட்டி முடித்திருக்கிறது. இதுதான் புதிய இந்தியா. இது தன்னம்பிக்கை நிறைந்த இந்தியா.

அதேசமயம், ஊழல், வாரிசு அரசியல், கொள்கைகளில் சமரசம் ஆகியவை இந்தியாவின் திறனை மோசமாக பாதிக்கிறது. ஆகவே, இம்மூன்றையும் எதிர்த்து போராடுவது தற்போதைய தேவையாக இருக்கிறது. ஒரு அரசியல் கட்சிக்கு ஒரே குடும்பம் மட்டும் எப்படி பொறுப்பாக இருக்க முடியும். ஆகவே, ஊழல், குடும்ப அரசியல் ஆகியவற்றுக்கு எதிராக போராடுவதுதான் எனது வாழ்நாள் அர்ப்பணிப்பாக இருக்கும்.

எனது தலைமையிலான ஒவ்வொரு அமைச்சகங்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளை திறம்பட செய்து வருகின்றன. மேலும், பெரும்பான்மை அரசினால்தான் சீர்திருத்தங்களை செய்ய முடியும். அந்தவகையில், எனது தலைமையில் பெரும்பான்மை அரசு அமைந்ததால் சீர்திருத்தங்களை செய்ய எனக்கு நம்பிக்கை கிடைத்தது. மக்கள் என் மீது வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை. வளரச்சியடைந்த இந்தியாவை உருவாக்கி இருக்கிறேன்.

நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும்போது, 2047-ல் இந்தியாவின் வளர்ச்சியானது வளர்ந்த நாடுகளைப்போல இணையற்றதாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். இதை நான் சொல்லக் காரணம், எனது நாட்டின் திறன் மற்றும் வளங்களின் அடிப்படையில்தான். ஆகவே, வரும் 5 ஆண்டுகள் கனவை நனவாக்கும் பொன்னான தருணமாகும். அடுத்த ஆண்டு நான் செங்கோட்டையில் கொடியேற்றும்போது நாட்டின் சாதனைகள் மற்றும் வளர்ச்சியை முன்வைப்பேன்.

கடந்த சில வாரங்களாக மணிப்பூரில் வன்முறை அலை வீசியது. பலரும் தங்களது உயிரை இழந்தனர். எங்கள் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் அவமானப்படுத்தப்பட்டனர். மணிப்பூரில் அமைதியைக் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றி வருகின்றன. தற்போது அப்பகுதியில் அமைதி திரும்பி வருகிறது. மணிப்பூர் மக்களுடன் இந்த நாடே நிற்கிறது. மணிப்பூர் வன்முறைக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்படும்.

அதேபோல, இந்த ஆண்டு நாட்டின் பல பகுதிகளில் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இயற்கை பேரிடர்கள் பாதிப்புகளை உருவாக்கி இருக்கிறது. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பிரதமர் மோடி கூறினார்.

Tags: Modi in Red FortIndiaModimodi speechRed Fortindependence day76th independance day
ShareTweetSendShare
Previous Post

புதிதாக விஸ்வகர்மா திட்டம்: பிரதமர் மோடி அறிவிப்பு!

Next Post

தமிழர்கள் தமிழுடன் சேர்த்து இந்தியையும் கற்க வேண்டும்: அமித்ஷா வலியுறுத்தல்!

Related News

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

திருப்பதி தேவஸ்தான முன்னாள் விஜிலன்ஸ் அதிகாரி கொலை வழக்கு – போலீசார் தீவிர விசாரணை!

முதலீடுகளை கோட்டை விடும் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூரில் SIR நடவடிக்கை – திமுகவினர் தலையீடு உள்ளதாக குற்றச்சாட்டு!

சிவகங்கையில் வட்டாட்சியரை கடித்த தெருநாய் – நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை சேலையூரில் கொள்ளையர்கள் கைவரிசை – வெளியானது வீடியோ!

சுசீந்திரம் தாணுமாலய கோயில் தெப்பக்குள விவகாரம் – அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா அம்மா மறைவு – அண்ணாமலை இரங்கல்!

வேலூரில் திமுக கவுன்சிலர் இல்லத்தில் S.I.R. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்த அதிகாரிகள் – அதிமுகவினர் வாக்குவாதம்!

கேரளாவில் பரவும் அமீபா தொற்று – சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை!

“இண்டி” கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி காங்கிரசுக்கு உள்ளதா? – திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவை நாடும் சர்வதேச நாடுகள் – மோகன் பகவத்

காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது – பிரதமர் மோடி

அனைத்தையும் எதிர்ப்பதா? : SIR நடவடிக்கையை எதிர்க்கும் காரணத்தை விஜய் கூற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies