மாலத்தீவு அதிபரின் அடாவடியால் மரணமடைந்த 14 வயது சிறுவன்!
Sep 8, 2025, 08:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாலத்தீவு அதிபரின் அடாவடியால் மரணமடைந்த 14 வயது சிறுவன்!

Web Desk by Web Desk
Jan 21, 2024, 03:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீன ஆதரவாளரான மாலத்தீவின் புதிய அதிபர் முகமது முய்ஸு, இந்திய விமானத்தை பயன்படுத்த அனுமதி மறுத்து அடாவடி செய்ததால், 14 வயது சிறுவனின் உயிர் பரிதாபமாகப் போயிருக்கிறது.

மாலத்தீவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் சீன ஆதரவாளரான முகமது முய்ஸு வெற்றி பெற்று பதவியேற்றார். இதனால், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். அந்த வகையில், மாலத்தீவில் உள்ள இந்திய படைகளை மார்ச் 15-ம் தேதிக்குள் திரும்பப் பெறும்படி இந்தியாவிடம் வலியுறுத்தினார்.

மேலும், வெற்றிபெற்ற கையோடு, சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார் முகமது முய்ஸு. பின்னர், சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய முகமது முய்ஸு, இந்தியாவை மறைமுகமாக விமர்சித்தார். அதேபோல, அந்நாட்டு அமைச்சர்கள் சிலரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையும், இந்தியர்களையும் தரக்குறைவாக விமர்சித்தனர். இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

இதற்கிடையே ,மாலத்தீவுக்கு ட்ரோனியர் ரக விமானத்தை இந்தியா வழங்கியது. இந்த விமானத்தை இந்திய வீரர்கள் இயக்கி வருகின்றனர். மாலத்தீவில் மருத்துவ மற்றும் பிற பயன்பாட்டிற்காக இந்த விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விமானத்தை பயன்படுத்த முகமது முய்ஸு அனுமதி மறுத்ததால்தான் 14 வயது சிறுவனின் உயிர் பரிதாபமாகப் போயிருக்கிறது.

அதாவது, மாலத்தீவின் கபி அலிப் விலிங்ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு மூளையில் கட்டி இருந்தது. இதனால், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தான். இந்த சூழலில், இச்சிறுவனுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சேர்த்தபோது, மேல் சிகிச்சைக்காக தலைநகர் மாலியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

இதையடுத்து, சிறுவனை அழைத்துச் செல்ல இந்தியா வழங்கிய ட்ரோனியர் விமானத்தைப் பயன்படுத்த அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், விமானத்தைப் பயன்படுத்த அதிபர் முகமது முய்ஸு அனுமதி வழங்கவில்லை. இதனால் சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது.

ஆகவே, 16 மணி நேரத்திற்கு பிறகுதான் சிறுவன் விமானம் மூலம் மாலிக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால், அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதையடுத்து, இந்திய விமானத்தைப் பயன்படுத்த அதிபர் முகமது முய்ஸு அனுமதி அளிக்காததால்தான் சிறுவன் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இதுகுறித்து சிறுவனின் உறவினர் ஒருவர் கூறுகையில், “உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவனை உரிய நேரத்தில் தலைநகர் மாலியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. ஆகவே, தாமதமான சிகிச்சையால் சிறுவன் உயிரிழந்து விட்டான்” என்றார்.

Tags: PresidentMaldivesMohamed muuizu
ShareTweetSendShare
Previous Post

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ரூ.10,000 கோடி செலவாகும்: தேர்தல் ஆணையம் தகவல்!

Next Post

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பிப்.13-ஆம் தேதி திறப்பு!

Related News

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணை – சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல் – திமுகவினரின் கார் பார்க்கிங் ஆக மாறியதால் அதிர்ச்சி!

முக்கியத்துவம் பெற்ற குடியரசு துணை தலைவர் தேர்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் : நயினார் நாகேந்திரன்

பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணியின் காரை விரட்டிய யானை!

ராணிப்பேட்டை : இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

பெருமையை இழக்கும் ஈத்தாமொழி தேங்காய்கள் : வேதனையில் விவசாயிகள்!

ராணுவ வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழா – வியக்க வைத்த சாகச நிகழ்ச்சி!

கர்நாடகா : போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் மீது போலீசார் தடியடி!

கோவை : கிழக்கு புற வழி சாலைக்கு எதிர்ப்பு – ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

நேபாளம் : இந்திர ஜாத்ரா திருவிழாவையொட்டி தேர் ஊர்வலம்!

விமானத்தில் மல்லிகைப் பூ எடுத்துச் சென்ற மலையாள நடிகைக்கு அபராதம்!

ஆந்திரா : ஆசிரியர் தினம் – ஆசிரியர்களுக்கு நூறு விதமான உணவுகளை பரிமாறி அசத்திய மாணவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies