மாலத்தீவு அதிபரின் அடாவடியால் மரணமடைந்த 14 வயது சிறுவன்!
Jul 31, 2026, 12:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாலத்தீவு அதிபரின் அடாவடியால் மரணமடைந்த 14 வயது சிறுவன்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 21, 2024, 03:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீன ஆதரவாளரான மாலத்தீவின் புதிய அதிபர் முகமது முய்ஸு, இந்திய விமானத்தை பயன்படுத்த அனுமதி மறுத்து அடாவடி செய்ததால், 14 வயது சிறுவனின் உயிர் பரிதாபமாகப் போயிருக்கிறது.

மாலத்தீவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் சீன ஆதரவாளரான முகமது முய்ஸு வெற்றி பெற்று பதவியேற்றார். இதனால், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். அந்த வகையில், மாலத்தீவில் உள்ள இந்திய படைகளை மார்ச் 15-ம் தேதிக்குள் திரும்பப் பெறும்படி இந்தியாவிடம் வலியுறுத்தினார்.

மேலும், வெற்றிபெற்ற கையோடு, சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார் முகமது முய்ஸு. பின்னர், சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய முகமது முய்ஸு, இந்தியாவை மறைமுகமாக விமர்சித்தார். அதேபோல, அந்நாட்டு அமைச்சர்கள் சிலரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையும், இந்தியர்களையும் தரக்குறைவாக விமர்சித்தனர். இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

இதற்கிடையே ,மாலத்தீவுக்கு ட்ரோனியர் ரக விமானத்தை இந்தியா வழங்கியது. இந்த விமானத்தை இந்திய வீரர்கள் இயக்கி வருகின்றனர். மாலத்தீவில் மருத்துவ மற்றும் பிற பயன்பாட்டிற்காக இந்த விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விமானத்தை பயன்படுத்த முகமது முய்ஸு அனுமதி மறுத்ததால்தான் 14 வயது சிறுவனின் உயிர் பரிதாபமாகப் போயிருக்கிறது.

அதாவது, மாலத்தீவின் கபி அலிப் விலிங்ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு மூளையில் கட்டி இருந்தது. இதனால், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தான். இந்த சூழலில், இச்சிறுவனுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சேர்த்தபோது, மேல் சிகிச்சைக்காக தலைநகர் மாலியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

இதையடுத்து, சிறுவனை அழைத்துச் செல்ல இந்தியா வழங்கிய ட்ரோனியர் விமானத்தைப் பயன்படுத்த அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், விமானத்தைப் பயன்படுத்த அதிபர் முகமது முய்ஸு அனுமதி வழங்கவில்லை. இதனால் சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது.

ஆகவே, 16 மணி நேரத்திற்கு பிறகுதான் சிறுவன் விமானம் மூலம் மாலிக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால், அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதையடுத்து, இந்திய விமானத்தைப் பயன்படுத்த அதிபர் முகமது முய்ஸு அனுமதி அளிக்காததால்தான் சிறுவன் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இதுகுறித்து சிறுவனின் உறவினர் ஒருவர் கூறுகையில், “உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவனை உரிய நேரத்தில் தலைநகர் மாலியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. ஆகவே, தாமதமான சிகிச்சையால் சிறுவன் உயிரிழந்து விட்டான்” என்றார்.

Tags: PresidentMaldivesMohamed muuizu
ShareTweetSendShare
Previous Post

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ரூ.10,000 கோடி செலவாகும்: தேர்தல் ஆணையம் தகவல்!

Next Post

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பிப்.13-ஆம் தேதி திறப்பு!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies