மாலத்தீவு அதிபரின் அடாவடியால் மரணமடைந்த 14 வயது சிறுவன்!
Jun 15, 2026, 02:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாலத்தீவு அதிபரின் அடாவடியால் மரணமடைந்த 14 வயது சிறுவன்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 21, 2024, 03:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீன ஆதரவாளரான மாலத்தீவின் புதிய அதிபர் முகமது முய்ஸு, இந்திய விமானத்தை பயன்படுத்த அனுமதி மறுத்து அடாவடி செய்ததால், 14 வயது சிறுவனின் உயிர் பரிதாபமாகப் போயிருக்கிறது.

மாலத்தீவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் சீன ஆதரவாளரான முகமது முய்ஸு வெற்றி பெற்று பதவியேற்றார். இதனால், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். அந்த வகையில், மாலத்தீவில் உள்ள இந்திய படைகளை மார்ச் 15-ம் தேதிக்குள் திரும்பப் பெறும்படி இந்தியாவிடம் வலியுறுத்தினார்.

மேலும், வெற்றிபெற்ற கையோடு, சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார் முகமது முய்ஸு. பின்னர், சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய முகமது முய்ஸு, இந்தியாவை மறைமுகமாக விமர்சித்தார். அதேபோல, அந்நாட்டு அமைச்சர்கள் சிலரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையும், இந்தியர்களையும் தரக்குறைவாக விமர்சித்தனர். இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

இதற்கிடையே ,மாலத்தீவுக்கு ட்ரோனியர் ரக விமானத்தை இந்தியா வழங்கியது. இந்த விமானத்தை இந்திய வீரர்கள் இயக்கி வருகின்றனர். மாலத்தீவில் மருத்துவ மற்றும் பிற பயன்பாட்டிற்காக இந்த விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விமானத்தை பயன்படுத்த முகமது முய்ஸு அனுமதி மறுத்ததால்தான் 14 வயது சிறுவனின் உயிர் பரிதாபமாகப் போயிருக்கிறது.

அதாவது, மாலத்தீவின் கபி அலிப் விலிங்ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு மூளையில் கட்டி இருந்தது. இதனால், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தான். இந்த சூழலில், இச்சிறுவனுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சேர்த்தபோது, மேல் சிகிச்சைக்காக தலைநகர் மாலியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

இதையடுத்து, சிறுவனை அழைத்துச் செல்ல இந்தியா வழங்கிய ட்ரோனியர் விமானத்தைப் பயன்படுத்த அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், விமானத்தைப் பயன்படுத்த அதிபர் முகமது முய்ஸு அனுமதி வழங்கவில்லை. இதனால் சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது.

ஆகவே, 16 மணி நேரத்திற்கு பிறகுதான் சிறுவன் விமானம் மூலம் மாலிக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால், அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதையடுத்து, இந்திய விமானத்தைப் பயன்படுத்த அதிபர் முகமது முய்ஸு அனுமதி அளிக்காததால்தான் சிறுவன் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இதுகுறித்து சிறுவனின் உறவினர் ஒருவர் கூறுகையில், “உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவனை உரிய நேரத்தில் தலைநகர் மாலியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. ஆகவே, தாமதமான சிகிச்சையால் சிறுவன் உயிரிழந்து விட்டான்” என்றார்.

Tags: PresidentMaldivesMohamed muuizu
ShareTweetSendShare
Previous Post

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ரூ.10,000 கோடி செலவாகும்: தேர்தல் ஆணையம் தகவல்!

Next Post

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பிப்.13-ஆம் தேதி திறப்பு!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies