பிரதமர் மோடி ஊழலில்லாத ஆட்சியை அளித்துள்ளதாகவும், 3-வது முறையாக அவர் பிரதமராவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநில பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தமிழிசை சவுந்தர ராஜன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், பிரதமர் மோடி தமிழர்களுக்கு அங்கீகாரம் அளித்ததற்கு, விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது கொடுத்ததே சான்று என தெரிவித்தார். சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க திமுக ஆட்சியில் எதுவும் இல்லை என்றும், 3 ஆண்டு கால திமுக ஆட்சி செயலற்ற ஆட்சி என்றும் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்தார்.