தமிழ்நாட்டில் அடுத்த 4 தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 16-ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வரும் 16-ம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இன்றைய தினம் ஒடிசாவின் சில பகுதிகள், கேரளா, மாஹே, கடலோர ஆந்திரா, ஏனாம், தெலுங்கானா மற்றும் உள் கர்நாடகாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒரு சில இடங்களில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.