மாமல்லபுரம் தல சயன பெருமாள் கோயில் தல வரலாறு!
Mar 15, 2026, 07:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாமல்லபுரம் தல சயன பெருமாள் கோயில் தல வரலாறு!

Murugesan M by Murugesan M
Jun 11, 2024, 10:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருமாலின் 10 வகை சயனத் திருக்கோலங்களில் ஒன்று தான் தல சயனத் திருக்கோலம். இந்த அருள் கோலத்தில், பெருமாள் காட்சி அளிக்கும், திருக்கோயில் தான்  மாமல்லபுரம் தல சயனப் பெருமாள் கோயிலாகும். 108 திவ்விய தேசங்களில் 63-வது புண்ணிய ஷேத்திரமாக விளங்கும் இத்திருக்கோயிலைப் பற்றி இப்போது பார்ப்போம் .

 

தமிழகத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில்,  உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் அமைந்துள்ளது தல சயனப் பெருமாள் திருக்கோயில்.

சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் கிபி 14ஆம் நூற்றாண்டில் விஜய நகர மன்னர்களில் ஒருவரான பரங்குசன்  என்கிற மன்னன் ஆகம விதிப்படி இக்கோயிலை நிர்மாணித்து வழிபட்டு வந்ததாக கோயில் தல வரலாறு சொல்கிறது.

முதலாழ்வார் மூவருள் இரண்டாம் இடத்தில் வைத்து சிறப்பிக்கப்படும் பூதத்தாழ்வார் அவதரித்த திருத்தலமான இக்கோயிலில் 12 ஆழ்வார்களுக்கும் தனித்தனி சன்னதிகள் இருக்கின்றன.

திருமாலின் கையிலுள்ள கதாயுதத்தின் அம்சமான பூதத்தாழ்வார்,108 திவ்விய தேசங்களில் 13 திவ்விய தேசங்களுக்கு  மட்டும் மங்களாசாசனம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புன்னை மரமே தலமரமாகவும், புண்டரீக புஷ்கரணி தீர்த்தமாகவும் விளங்கும் இக்கோயிலில், சயனப் பெருமாள் கிடந்த  கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவி இல்லாமல் காட்சி அளிக்கிறார். மேலும்  தனது நான்கு திருக்கரங்களில் வலது கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்திருக்கிறார்.

உற்சவராக உலகுய்ய நின்றான் என்னும் திருநாமத்துடன் பெருமாள் விளங்குகிறார். அவருக்கு இருபுறமும், நில மங்கை தாயாரும்,ஆண்டாளும் காட்சி அளிக்கிறார்கள்.

கோயிலின் வெளிச்சுற்றுப் பிரகாரத்தில் ஆஞ்சநேயர்,லட்சுமி நரசிம்மர், ராமர்,கருடன் ஆகிய சன்னதிகள் உள்ளன .

7ஆம் நூற்றாண்டில்,பல்லவ மன்னன் மல்லேஸ்வரன் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்த அன்னதானத்தை நிறுத்தியதால்,மக்கள் பட்டினியால் இறந்ததாகவும் ,கோபமுற்ற வைணவப் பெரியவர்கள், இட்ட சாபத்தால் மன்னன் அங்குள்ள குளத்தில் முதலையாக வாழ்ந்து வந்ததாகவும், புண்டரீக மகரிஷிக்கு 1000இதழ் கொண்ட தாமரை பூவைப் பறித்து கொடுத்து சாப விமோசனம் பெற்றதாகவும் தல வரலாறு தெரிவிக்கிறது.

எனவே இக்கோயிலில்,புண்டரீக மகரிஷியின் திருப்பாதம் பட்ட புஷ்கரணி தெப்பக்குளத்தில் ,மாசி மகத்தன்று தல சயனப் பெருமாளுக்கு தெப்ப உற்சவம் இன்றும் சிறப்பாக நடைபெறுகிறது.

இதனாலேயே, மகாளய அமாவாசை அன்று , இந்த கோயிலில் திதி கொடுத்தால், காசி ராமேஸ்வரம் ,கயா ஆகிய தலங்களில் திதி கொடுப்பதால் கிடைக்கும் புண்ணியத்தை விட பன்மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

வைகுண்ட ஏகாதசி விழா ,சித்திரை திருவிழா உள்ளிட்ட பெருமாளுக்கு உரிய திருவிழாக்கள் இக்கோயிலில் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இக்கோயிலுக்கு வந்து தல சயனப் பெருமாளையும்,நிலமங்கை தாயாரையும் வழிபட்டால் நிலம்.சொத்து,வீடு சம்பந்தமான பிரச்சனைகள் தீரும் என்றும், வீடு மனை வாகன யோகம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

சுவாதி நக்ஷத்திர நாளில் ,இந்த கோயிலுக்கு வந்து வணங்கினால்,கடன் தொல்லைகளில் இருந்து விடுபடலாம் என்றும் பக்தர்கள் சொல்கிறார்கள்.

Tags: mamallapuramThala Sayanath ThirukolamMamallapuram templeChengalpattu District
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் வீடு கட்டும் திட்டம் : மேலும் 3 கோடி வீடுகள் கட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Next Post

பணிகளை தொடங்கிய மத்திய அமைச்சர்கள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies