டாஸ்மாக் தலைமையகத்தில் அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெற தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த ஆண்டு மார்ச் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.
இதனை எதிர்த்து அப்போதையை திமுக அரசு தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து திமுக அரசு தொடர்ந்த மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அமலாக்கத் துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும் அமலாக்கத்துறையின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான செயல் எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.
இந்நிலையில் டாஸ்மாக் தலைமையகத்தில் அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெற தற்போதைய தவெக அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், மேல்முறையீட்டை வாபஸ் பெறுவது தொடர்பான இறுதி முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்த நடவடிக்கை மாநில அரசு மற்றும் மத்திய விசாரணை அமைப்புகளுக்கிடையேயான சட்டப் போராட்டத்தில் முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் முந்தைய திமுக அரசின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பெரும் சிக்கல் எழும் என கருதப்படுகிறது.















