ஆண்டுக்கு 900 கிலோ தங்கம் - ஆந்திராவின் KGF 'ஸ்வர்ணகிரி' : சிறப்பு கட்டுரை!
Aug 12, 2026, 12:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆண்டுக்கு 900 கிலோ தங்கம் – ஆந்திராவின் KGF ‘ஸ்வர்ணகிரி’ : சிறப்பு கட்டுரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 27, 2026, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரியில் சுதந்திர இந்தியாவின் முதல் தனியார் தங்க சுரங்கத்தைத் தொடங்கி வைத்த முதல்வர் சந்திரபாபு நாயுடு, கிராமத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக ‘ஸ்வர்ணகிரி’ என அறிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த 2001-ம் ஆண்டு கர்நாடகாவின் புகழ்பெற்ற ‘கோலார் தங்க வயல்’ (KGF) மூடப்பட்டது. . உலகிலேயே மிக ஆழமான 3.2 கிலோமீட்டர் சுரங்கமாக இருந்த KGF செயல்பாட்டில் இருந்த சுமார் 120 ஆண்டுகளில் 800 முதல் 900 டன் வரையிலான தங்கத்தை இந்தியாவுக்கு அளித்துள்ளது. அதன் பிறகு அம்மாநில அரசு ‘ஹட்டி’ (Hutti) சுரங்கத்தில் மட்டுமே தங்கம் வெட்டியெடுக்கப்பட்டு வந்தது.

கடந்த 1990-களிலேயே ஆந்திராவின் ஜொன்ன கிரியில் தங்கம் இருப்பதற்கான முதற்கட்ட ஆராய்ச்சிகளை ‘ஜியோ சூர்’ நிறுவனம் தொடங்கியது.

இந்த ஸ்வர்ணகிரியில் சுமார் 82 லட்சம் டன் தாதுக்கள் இருப்பதாகவும், ஒரு டன் தாதுவிலிருந்து சராசரியாக 1.49 கிராம் தங்கம் வீதம் மொத்தம் 12 டன் தங்கம் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

KGF போல பூமிக்கு அடியில் ஆழமாகச் செல்லாமல், இது நிலப்பரப்பிலேயே தோண்டப்படும் திறந்தவெளிச் சுரங்கமாக உருவாக்கப்பட்டுள்ள இது சுமார் 9 ஆண்டுகள் வரை தடையின்றி இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் த்ரிவேணி எர்த்மூவர்ஸ் மற்றும் டெக்கான் கோல்ட் மைன்ஸ் ஆகியவற்றின் உதவியுடன் சுமார் 405 கோடி ரூபாய் முதலீட்டில் இந்தத் திட்டத்தை ‘ஜியோ மைசூர்’ நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இதற்காக, ஆந்திர மாநில அரசு சுமார் 1,500 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ளது. இதில், 600 ஏக்கர் அளவிலான சுரங்க பணிகளைத் தொடங்கி வைத்த முதல்வர் சந்திரபாபு நாயுடு, 2 ஆம் கட்ட பணிகளுக்காக அடிக்கல்லையும் நாட்டியுள்ளார்.

இந்த தங்க சுரங்கத்தில் இருந்து முதல் ஆண்டில் 400 கிலோ தங்கம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு, 900 கிலோ தங்கம் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பின், ஆண்டுக்கு, 2,000 கிலோ தங்கம் என்ற அளவுக்கு உற்பத்தியை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக சுமார் 700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், அதில் 85 சதவீதம் உள்ளூர் மக்களுக்கே வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த சுரங்கத்தில் உற்பத்தியாகும் தங்கத்தின் மதிப்பில் 4 சதவீதம் ராயல்டி தொகை என்ற கணக்கில் ஆண்டுக்கு 57 கோடி ரூபாய் அரசுக்கு வருவாயாக வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

மேலும் இந்தச் சுரங்கத்தின் உற்பத்தி 900 கிலோவை எட்டும் போது அரசின் வருவாய் 144 கோடி ரூபாய் வரை அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் தங்கம் இறக்குமதி ஆண்டுக்கு 800 முதல் 1000 டன்னாக இருக்கும் நிலையில் ஸ்வர்ணகிரியில் ஆண்டுக்கு ஒன்று முதல் 1.3 டன் தங்கம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதலாக சிகுர்குண்டா-பிசனாதம் தொகுதியில் 2.2 மில்லியன் டன்களுக்கும் அதிகமான தாது வளங்கள் இருப்பதாக மாநில அரசு மதிப்பிட்டுள்ளது மேலும் ஒரு டன்னுக்கு சராசரியாக 5.64 கிராம் தங்கத் தரம் உள்ளதாகவும் ஒருங்கிணைந்த சுரங்க இணையதளம் மூலம் ஏலம் விடப்படுவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள போக்சம்பள்ளி, ராமகிரி மற்றும் ஜவகுலா உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்த ஆய்வுகள் அப்பகுதிகளிலும் ராமகிரி மற்றும் வேலிகல்லு பச்சைக்கல் மண்டலங்களிலும் தரமான தங்கம் இருப்பதற்கான வாய்ப்புக்களைக் கண்டு பிடித்துள்ளன.

இவை எல்லாம் கர்நாடகாவின் புகழ்பெற்ற ‘கோலார் தங்க வயல்’ (KGF) போன்ற பெருமையை இந்த ஸ்வர்ணகிரி திட்டம் ஆந்திராவுக்குப் பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: JonnagiriAndhra PradeshChief Minister Chandrababu NaiduKurnoolIndia's first private gold mine
Share
Tweet
SendShare
Previous Post

ஹோர்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம்? – சீனா, வளைகுடா நாடுகளுடன் ஈரான் தீவிர ஆலோசனை : சிறப்பு தொகுப்பு!

Next Post

அமலாக்கத்துறைக்கு எதிரான மனு; திரும்ப பெற தமிழக அரசு பரிசீலனை

Related News

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளள ரஷ்ய விண்வெளி வீரர்கள் – இந்திய மக்களுக்கு தந்திர தின வாழ்த்து!

அமலாக்கத்துறை கடிதம் எழுதியும், முந்தைய திமுக அரசு, முன்னாள் அமைச்சர் நேருவை பாதுகாத்தது – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒவ்வொருவரின் உணர்வில் கலந்துள்ளது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies