டெல்லி சிறப்பு பிரதிநிதி தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் பதிலளிக்க வேண்டுமென பாஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுக கூட்டணியில் ஒற்றுமை இல்லாத நிலை காணப்படுவதாகவும், அந்தக் கூட்டணி சிதறிப்போயிருப்பதாகவும் விமர்சித்தார். நாடு முழுவதும் வலுவான கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். டெல்லி சிறப்பு பிரதிநிதி தமிழகத்தைச் சாராதவர் என்பது பிரச்னை அல்ல என்றும், அவர் தமிழக பிரச்னைகளை புரிந்து வைத்துள்ளாரா என்பதுதான் முக்கியம் என்றும் வானதி சீனிவாசன் குறிப்பிட்டார். டெல்லி பிரதிநிதி தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அனுபவம் குறைவாக இருந்தாலும் குதிரைபேரத்தில் தற்போதைய அரசு வேகமாக செயல்படுவதாகவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
















