உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற முதல் பெண் ருக்மிணி லட்சுமிபதி - சிறப்பு தொகுப்பு!
Aug 15, 2026, 12:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற முதல் பெண் ருக்மிணி லட்சுமிபதி – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 15, 2026, 11:38 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய விடுதலைக்கு வித்திட்ட முக்கிய போராட்டங்கள் என்றால் அவை உப்பு சத்யாகிரகமும், வெள்ளையனே வெளியேறு போராட்டங்கள் தாம். இதில் பங்கேற்ற முக்கியமான சுதந்திர போராட்ட வீராங்கனை ருக்மிணி லட்சுமிபதி பற்றிய நினைவலைகளை பார்ப்போம்.

பிரிட்டிஷ் அரசின் உப்பு வரி மற்றும் ஏகபோக உரிமையை எதிர்த்து, 1930ம் ஆண்டு மார்ச் 12-ல் மகாத்மா காந்தி குஜராத் சபர்மதி ஆசிரமத்தில் தொடங்கி தண்டி வரை 241 மைல்கள் நடைப்பயணம் மேற்கொண்டு உப்புச் சட்டத்தை மீறும் போராட்டத்தை முன்னெடுத்தார்.

முன்னதாக தமிழகத்தில் 1892ஆம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி ஒரு நிலக்கிழார் குடும்பத்தில் பிறந்த ருக்மிணி லட்சுமிபதியின் தாத்தா ராஜா டி. ராம்ராவ் பெரிய செல்வாக்கு மிக்கவராக இருந்தார். சென்னை பெண்கள் கிருத்துவக் கல்லூரியில் பி.ஏ பட்டம் பெற்ற ருக்மணி, 1923ல் காங்கிரசில் சேர்ந்தார். பிறகு 1926ல் பாரிசில் நடந்த சர்வதேச பெண்கள் வாக்குரிமை கூட்டணி பேராயத்தில் இந்தியப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார்.

1930ல் வேதாரண்யத்தில் மூதறிஞர் ராஜாஜி தலைமையிலான நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டதற்காக ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டார். இதன் மூலம் உப்பு சத்தியாகிரக இயக்கத்தில் சிறை சென்ற முதல் பெண் என்ற பெருமை பெற்றார்.

1934ல் சென்னை மாகாண சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ருக்மணி 1937லும் வெற்றி பெற்று சட்டமன்றத்தின் துணைச் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1946 ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி முதல் 1947ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி வரை சென்னை மாகாணத்தில் அப்போதைய முதலமைச்சர் பிரகாசத்தின் அமைச்சரவையில் பொதுச்சுகாதாரத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அதன் மூலம் சென்னை மாகாணத்தில் அமைச்சர் பதவி வகித்த முதல் மற்றும் ஒரே பெண் அமைச்சர் என்ற சாதனையையும் செய்தார்.

சென்னை எழும்பூரிலுள்ள மார்ஷல் சாலைக்கு ”ருக்மிணி லட்சுமிபதி சாலை” என்று பெயர் சூட்டியும் 1997ல் நினைவு அஞ்சல் தலை வெளியிட்டும் அரசு ருக்மணி லட்சுமிபதியைக் கவுரவப் பட்டுள்ளார்.

உப்புச் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்று சிறைசென்ற முதல் பெண் அரசியல் கைதியாகவும், சென்னை மாகாணத்தின் முதல் பெண் அமைச்சராகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளைப் படைத்த சுதந்திர போராட்டத் தியாகியான ருக்மணி லட்சுமிபதி இந்த 80வது சுதந்திர நாளில் போற்றி மகிழ்வோம்.

Tags: india independence day celebrationsindia at 80 celebration80th independence day celebration liveindia 80th independence daySalt SatyagrahaRukmini LakshmipathiQuit india movementIndependence Day celebrationIndependence Day celebrationsindia independence day celebration
Share
Tweet
SendShare
Previous Post

பஜனை பாடல்கள் மூலம் விடுதலை வேள்வியை மூட்டிய பங்கஜத்தம்மாள் : சிறப்பு தொகுப்பு!

Related News

பஜனை பாடல்கள் மூலம் விடுதலை வேள்வியை மூட்டிய பங்கஜத்தம்மாள் : சிறப்பு தொகுப்பு!

80-வது சுதந்திர தினம் கோலாகலம் – கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!

சாதனை ஏணியில் சரித்திரம் படைக்கும் இந்திய பொருளாதாரம் – சிறப்பு தொகுப்பு!

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் ‘வந்தே மாதரம்’ முழங்குவது வரலாற்று சிறப்புமிக்க தருணம் – பிரதமர் மோடி உரை!

80-வது சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம் – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

Load More

அண்மைச் செய்திகள்

உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற முதல் பெண் ருக்மிணி லட்சுமிபதி – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் மலையில் அளவீடு பணிகளை ஏன் முடிக்கவில்லை? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி!

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கி…. – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை!

சுதந்திர தின கொண்டாட்டம் – சென்னை கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் முதலமைச்சர் விஜய்!

நாட்டின் 80-வது சுதந்திர தினம் கோலாகலம் – டெல்லி செங்கோட்டையில் 13-வது முறையாக தேசிய கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

1000 அடி தேசியக் கொடியுடன் நடந்த நிகழ்ச்சி; மாணவர்கள் வைத்த முக்கிய கோரிக்கை

டாடா சன்ஸ் குழும புதிய தலைவர் யார்? : சந்திரசேகரன் ராஜினாமா செய்தது ஏன்? – சிறப்பு தொகுப்பு!

நடுவானில் திகில் சம்பவம் : சட்டென 300 அடி சரிந்த Air India விமானம் : சிறப்பு தொகுப்பு!

ஜஸ்டின் மணிகண்டன் ரத்தக்குழாய்களில் இரு இடங்களில் அடைப்பு – மருத்துவர்கள் உறுதி!

பெரம்பலூர் அருகே தேரில் மின்சாரம் பாய்ந்து இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies