சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா வரலாற்று சாதனைகளை படைத்துள்ளதாக தெரிவித்த பிரதமர், சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் ‘வந்தே மாதரம்’ முழங்குவது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்றார்.
இதனிடையே, இந்தியாவின் கனவுகளும் லட்சியங்களும் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்றும், சிறிய கனவுகளுடன் இனி இந்தியா முன்னேற முடியாது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மற்றும் நாட்டு மக்கள் துணை நிற்பார்கள் என கூறிய அவர், 2047-ஆம் ஆண்டு, சுதந்திரத்தின் 100-வது ஆண்டில் 140 கோடி இந்தியர்களின் கூட்டு முயற்சியால் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என இலக்கு நிர்ணயித்தார்.
மேலும், ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் தேசப்பற்று உணர்வு எதிரொலிப்பதாகவும், நாடு முழுவதும் மூவண்ணக் கொடி பட்டொளி வீசுவதாகவும் குறிப்பிட்டார்.
















