அவதூறு கருத்துக்களை தெரிவித்தற்காக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் மன்னிப்பு கோராவிட்டால், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க நேரிடும் என, திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பென் நிறுவனத்தின் தலைவரான சபரீசன் சார்பில், அவரது வழக்கறிஞர் அஸ்வின் பிரசன்னா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், சபரீசன் மீது அடிப்படை ஆதாரமற்ற, உள்நோக்கத்துடன் கூடிய கருத்துகளை இரண்டு அமைச்சர்களும் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சபரீசன் குறித்து இரு அமைச்சர்களும் தெரிவித்த கருத்துகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும், சபரீசனுக்கு எதிராக அவதூறான கருத்துகளை வெளியிட மாட்டோம் என எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள் மன்னிப்பு கோராவிட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
















