வந்தே மாதரம் இயற்றி 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை தேசமே கொண்டாடி வரும் நிலையில், வந்தே மாதரம் பாடலை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நிறுத்த சொல்லி அவமதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வந்தே மாதரம் இசைக்கப்பட்டது. அதற்கு ஆட்சேபனை தெரிவித்த சோனியா காந்தி, காங்கிரஸ் நிர்வாகிகளிடம் நிறுத்துமாறு கூறினார். அதையும் மீறி காங்கிரஸ் நிர்வாகிகள் வந்தே மாதரம் பாடினர். சுதந்திர தினத்தில் நடந்த இந்த சம்பவம் மிகவும் வெட்கக்கேடானது என பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
\சுதந்திர போராட்டத்தின் பாரம்பரியத்தை கொண்டாடுவதாக கூறும் காங்கிரஸ்தானா இது? என்று இந்த வீடியவை பகிர்ந்துள்ள மேற்கு வங்க மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் தீப்ஜித் சர்கார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் தேசியச் சின்னங்களை மீண்டும் மீண்டும் அவமதித்து வந்த மனப்பான்மையே இது என்று குறிப்பிட்டுள்ள தீப்ஜித் சர்கார், இந்த மனப்பான்மையை மக்கள் நிராகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதே போன்று பல்வேறு தரப்பினரும், வீடியோவை பகிர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
















