நாட்டின் 80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக முதலமைச்சர் விஜய் தேசிய கொடி ஏற்றினார்.
சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் தேசிய கொடி ஏற்ற வருகை தந்தார். தொடர்ந்து, காவல்துறை, சிங்கப்பெண் அதிரடி படையினர், இயற்கை பேரிடர் படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றுக்கொண்டார்.
இதை தொடர்ந்து கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை முதலமைச்சர் விஜய் முதன்முறையாக ஏற்றினார்.
சுதந்திர தின விழாவில், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், முதலமைச்சர் விஜயின் பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
















