சிவகங்கை சமஸ்தானத்திற்குட்பட்ட தேவகோட்டை சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டுக்கான ஆனித் திருவிழா 10 நாட்களுக்கு முன்பு காப்புக்கட்டுதலுடன் விமரிசையாக தொடங்கியது. நாள்தோறும் சுவாமியும் அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தை முன்னிட்டு சொர்ணமூர்த்தீஸ்வரரும், பெரிய நாயகி அம்பாளும் தனித்தனி தேர்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதனை தொடர்ந்து அமைச்சர் பிரபு வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்திற்காக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
















