திருவண்ணாமலை, சிவகங்கை மாவட்டங்களில் சம்பூர்ணதா அபியான் திட்டம் தொடக்கம்!
Aug 2, 2025, 04:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவண்ணாமலை, சிவகங்கை மாவட்டங்களில் சம்பூர்ணதா அபியான் திட்டம் தொடக்கம்!

Web Desk by Web Desk
Jul 5, 2024, 12:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் சம்பூர்ணதா அபியான் எனும் லட்சிய இலக்கு வட்டார மேம்பாட்டுத் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது

அனைத்துப் பகுதி மக்களுக்கும் அனைத்தும் கிடைக்கும் வகையில் மத்திய அரசின் சம்பூர்ணதா அபியான் லட்சிய இலக்கு வட்டார மேம்பாட்டுத் திட்டம் இன்று திருவண்ணாமலை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் தொடங்கி வைக்கப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டத்தில் பழங்குடியின மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் ஜவ்வாதுமலையில் இந்தத் திட்டத்தை மத்திய அரசின் நித்தி ஆயோக் துணை ஆலோசகர் திரு ஆர். சரவணபவன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இத்திட்டம் நாடு முழுவதும் 112 மாவட்டங்களில் 500 வட்டாரப் பகுதிகளில் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது என்றார்.  இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை அனைத்து பகுதிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அவர் கூறினார்.

சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி,விவசாயம் போன்ற அடிப்படை கட்டமைப்பு, சமூக மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இன்றைய தொடக்க விழாவில் திட்டத்தின் செயல்பாடுகள் பற்றிய ஒளிப்பதிவுக் காட்சிகளும் திரையிடப்பட்டன.

சம்பூர்ணதா அபியான் உறுதி மொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது பின்னர் கையொழுத்து இயக்கம் நடைபெற்றது.

பின்னர் ஜவ்வாதுமலையில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த மகளிருடன் திரு சரவண பவன் கலந்துரையாடினார். அங்கன்வாடி மையங்களுக்கு சென்ற அவர், கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கும் இணை உணவு குறித்தும் ஆய்வு செய்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் “சம்பூர்ணதா அபியான் ” திட்டத்தை சிறப்புத்  திட்ட இயக்குநர்  நிலை அதிகாரி   ரூபேஷ் சிங் குத்துவிளக்கு ஏற்றி  தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இத்திட்டத்தின் பயன்களை  இவ்வட்டாரத்தில் முழுமையாக எய்திடவும், வட்டாரத்தை ஆரோக்கியமானதாகவும்,  அதிகாரமிக்கதாகவும், வளமிக்கதாகவும் மாற்ற  நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். லட்சிய இலக்கு நிலையிலிருந்து எழுச்சிமிகு நிலைக்கு முன்னேற்றம் காண இத்திட்டப் பணிகள் பயன்படும் என்று திரு ரூபேஷ் சிங் தெரிவித்தார்.

பின்னர்,  வேளாண்மை, மருத்துவம், மகளிர் திட்டத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கைவினைப் பொருட்கள் கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.

Tags: Niti Aayog Deputy AdvisortiruvannamalaisivagangaSampoornatha Abhiyan
ShareTweetSendShare
Previous Post

2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்தியக் குழுவினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

Next Post

நாகர்கோயில் அருகே நகை மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

Related News

மிரட்சியில் இந்தியாவின் எதிரிகள் : கடற்படைக்கு வலுசேர்க்கும் Project-18 போர் கப்பல்!

பலூச் விடுதலை ராணுவம் எச்சரிக்கை : ட்ரம்பை தவறாக வழிநடத்தும் அசிம் முனீர்!

இந்தியாவுக்கு வந்த GE404 இன்ஜின் : தேஜஸ் MK1A-க்கான கூடுதல் திறன் பெற்ற தேஜஸ்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 1 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பிரமிடுகளை விட பழமையானதா? : 6000 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு!

ரஷ்யா, ஜப்பானை சுனாமி தாக்கும் : பாபா வாங்கா அன்று கணித்தது – இன்று பலித்தது!

Load More

அண்மைச் செய்திகள்

சூப்பர் ஹீரோவாக மாறிய இந்திய தொழிலாளர்கள் : சிங்கப்பூர் அதிபர் பாராட்டு – ரூ.47 லட்சம் பரிசு அறிவிப்பு!

அரசியல் கொள்ளைக்கு கோயிலும் தப்பவில்லை : அண்ணாமலை

அதிகாரிகளின் மெகா மோசடி : உணவகத்திற்கு சாதகமாக – மாற்றப்பட்ட பாலத்தின் வரைபடம்!

காவல் அதிகாரிக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் கைது செய்யப்பட்ட ரவுடிகள் – அதிர்ச்சி வீடியோ!

திமுகவின் விளம்பரத்திற்கு முற்றுப்புள்ளி : நயினார் நாகேந்திரன்

முதலமைச்சரின் பெயரை பயன்படுத்த தடை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் ஆணவ படுகொலைகள் நடைபெறுவது வேதனை அளிக்கிறது : ஆதி திராவிடர் பழங்குடியினர் மாநில ஆணைய தலைவர்!

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே பேருந்து திடீரென நின்றதில் சாலையில் வீசப்பட்ட கை குழுந்தை!

பீகாரின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

குஜராத் : மருத்துவ உபகரணங்கள் மிகுந்த பலனளிப்பதாக மக்கள் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies