ரீசார்ஜ் உயர்வுக்கு எதிர்ப்பு ட்ரெண்ட் ஆகும் Boycott ஹேஷ்டேக்!
Oct 19, 2025, 04:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரீசார்ஜ் உயர்வுக்கு எதிர்ப்பு ட்ரெண்ட் ஆகும் Boycott ஹேஷ்டேக்!

Web Desk by Web Desk
Jul 10, 2024, 12:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரே நேரத்தில் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளன.

இந்த விலை உயர்வால் வருத்தமடைந்துள்ள மக்கள், இந்த கட்டண உயர்வுக்கு எதிராக எக்ஸ் தளத்தில் “JioBoycott” என்றும், “BSNLkigharwapsi” என்றும் பதிவிட்டு வருகின்றனர். இந்த ஹேஷ்டேக்கள் சமூக வலைத்தளங்களில், இப்போது பரபரப்பாக ட்ரெண்டாகி வருகிறது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

2024 மக்களவை தேர்தலுக்குப் பிறகு, ரிலையன்ஸ் ஜியோ, பாரத் ஏர்டெல் போன்ற இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்கள், தங்களது ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்த வாய்ப்புள்ளதாக Antique Stock Broking தகவல் தெரிவித்திருந்தது.

அது போலவே, அந்நிறுவனங்கள் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளன. ஜூலை 3ஆம் தேதி முதல் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களும், ஜூலை 4 ஆம் தேதி முதல் வோடபோன் ஐடியா நிறுவனமும், புதிய விலையை அமலுக்குக் கொண்டு வந்துள்ளன.

2ஜி வாடிக்கையாளர்களை 4ஜிக்கு மாற்றுவது மற்றும் 4ஜி மற்றும் 5ஜி ஆகிய இரண்டிலும் அதிக டேட்டா திட்டங்களுக்கு வாடிக்கையாளர்களின் இடம்பெயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ரீசார்ஜ் திட்டங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பாராத இந்த விலை உயர்வால், மொபைல் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். இதன் விளைவாக, வாடிக்கையாளர்கள், எக்ஸ் தளத்தில், “#JioBoycott” என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி X தளத்தில் 40,000-க்கும் மேற்பட்ட பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

ரிலையன்ஸ் ஜியோ, பாரத் ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய மூன்று பெரிய தொலை தொடர்பு நிறுவனங்களை விடவும், அரசுக்குச் சொந்தமான BSNL மிகவும் மலிவான திட்டங்களைக் கொண்டுள்ளது.

30 நாட்கள் கணக்கில், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்கும் பிஎஸ்என்எல் திட்டத்தின் விலை 199 ரூபாய் ஆகும். அதே சேவையை வழங்க ஏர்டெல் நிறுவனம் 379 ரூபாய் வசூலிக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 28 நாட்கள் கணக்கில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்க 349 ரூபாய் வசூலிக்கிறது.

மேலும் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தங்களின் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களின் விலைகளை 600 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன. ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் ஓராண்டுக்கான ரீசார்ஜ் திட்டங்களின் விலையை 2,999 ரூபாயிலிருந்து 3,599 ரூபாயாக உயர்த்தி இருக்கின்றன.

இதனால், ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்திய இந்த 3 நிறுவனங்களைப் புறக்கணிக்க வாடிக்கையாளர்களில் பலர், முடிவெடுத்துள்ளதாக தெரிய வருகிறது.

ரிலையன்ஸ் ஜியோ, பாரத் ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகியவற்றுக்கு மாற்றாக, BSNL-மாற இருப்பதாகவும் பதிவிட்டு வருகிறார்கள். இதன் வெளிப்பாடாகவே , ‘JioBoycott’ இணையாக, ‘BSNLkigharwapsi’ ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

எனவே , ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வால் பாதிப்படைந்தவர்கள், 5G இணைப்பையும் விட்டுவிட தயாராக இருப்பதாக தெரியவருகிறது .

Tags: Boycott hashtag is trending against recharge hike!
ShareTweetSendShare
Previous Post

சட்டசபைக்குள் புகையிலை கொண்டு சென்ற விவகாரம்! – தீர்ப்பு தள்ளிவைப்பு!

Next Post

சொத்துவரி செலுத்தாத 43 கடைகளுக்கு சீல்! – மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

Related News

பெற்றோர்களே உஷார் : எல்லை மீறும் ChatGPT- சிறப்பு தொகுப்பு!

ஆற்காடு அருகே கடும் போக்குவரத்து நெரிசல் – அவசர அவசரமாக திறக்கப்பட்ட பாலம்!

திக்…திக்..திக்…சிதிலமடைந்த குடியிருப்புகள்.. திகிலுடன் வாழும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வரதராஜனுக்கு ஜாமின் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு!

இந்தியாவின் ராஜதந்திரம் : பாகிஸ்தானுக்கு சொல்லும் செய்தி என்ன? சிறப்பு தொகுப்பு!

சொந்த ஊர் செல்ல போதுமான பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அவதி – அதிகாரிகளுடன் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது – நிர்மலா சீதாராமன் பேட்டி!

தீபாவளி பண்டிகை உற்சாகம் – சென்னையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல்  பட்டாசுகளை வாங்க குவிந்த மக்கள்!

உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு – பொதுமக்கள் குளிக்க தடை!

தமிழகத்தில் 1,540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.14, 808 கோடி செலவிடப்படாமல் திரும்ப பெறப்பட்டுள்ளது!

திருவாடானை அருகே லஞ்சம் கேட்டு மிரட்டும் வருவாய் ஆய்வாளர்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் – செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

3 மாத அரிசியை வழங்க மத்திய அரசு உத்தரவு – ஒரு மாத அரிசியை மட்டும் வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு!

கோவை ஜிடி அருங்காட்சியகத்தில் PERFORMANCE CAR பிரிவு திறப்பு!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணை – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்கள் – ஆற்காட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies