ரீசார்ஜ் உயர்வுக்கு எதிர்ப்பு ட்ரெண்ட் ஆகும் Boycott ஹேஷ்டேக்!
Sep 19, 2026, 06:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரீசார்ஜ் உயர்வுக்கு எதிர்ப்பு ட்ரெண்ட் ஆகும் Boycott ஹேஷ்டேக்!

Murugesan M by Murugesan M
Jul 10, 2024, 12:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரே நேரத்தில் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளன.

இந்த விலை உயர்வால் வருத்தமடைந்துள்ள மக்கள், இந்த கட்டண உயர்வுக்கு எதிராக எக்ஸ் தளத்தில் “JioBoycott” என்றும், “BSNLkigharwapsi” என்றும் பதிவிட்டு வருகின்றனர். இந்த ஹேஷ்டேக்கள் சமூக வலைத்தளங்களில், இப்போது பரபரப்பாக ட்ரெண்டாகி வருகிறது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

2024 மக்களவை தேர்தலுக்குப் பிறகு, ரிலையன்ஸ் ஜியோ, பாரத் ஏர்டெல் போன்ற இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்கள், தங்களது ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்த வாய்ப்புள்ளதாக Antique Stock Broking தகவல் தெரிவித்திருந்தது.

அது போலவே, அந்நிறுவனங்கள் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளன. ஜூலை 3ஆம் தேதி முதல் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களும், ஜூலை 4 ஆம் தேதி முதல் வோடபோன் ஐடியா நிறுவனமும், புதிய விலையை அமலுக்குக் கொண்டு வந்துள்ளன.

2ஜி வாடிக்கையாளர்களை 4ஜிக்கு மாற்றுவது மற்றும் 4ஜி மற்றும் 5ஜி ஆகிய இரண்டிலும் அதிக டேட்டா திட்டங்களுக்கு வாடிக்கையாளர்களின் இடம்பெயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ரீசார்ஜ் திட்டங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பாராத இந்த விலை உயர்வால், மொபைல் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். இதன் விளைவாக, வாடிக்கையாளர்கள், எக்ஸ் தளத்தில், “#JioBoycott” என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி X தளத்தில் 40,000-க்கும் மேற்பட்ட பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

ரிலையன்ஸ் ஜியோ, பாரத் ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய மூன்று பெரிய தொலை தொடர்பு நிறுவனங்களை விடவும், அரசுக்குச் சொந்தமான BSNL மிகவும் மலிவான திட்டங்களைக் கொண்டுள்ளது.

30 நாட்கள் கணக்கில், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்கும் பிஎஸ்என்எல் திட்டத்தின் விலை 199 ரூபாய் ஆகும். அதே சேவையை வழங்க ஏர்டெல் நிறுவனம் 379 ரூபாய் வசூலிக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 28 நாட்கள் கணக்கில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்க 349 ரூபாய் வசூலிக்கிறது.

மேலும் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தங்களின் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களின் விலைகளை 600 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன. ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் ஓராண்டுக்கான ரீசார்ஜ் திட்டங்களின் விலையை 2,999 ரூபாயிலிருந்து 3,599 ரூபாயாக உயர்த்தி இருக்கின்றன.

இதனால், ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்திய இந்த 3 நிறுவனங்களைப் புறக்கணிக்க வாடிக்கையாளர்களில் பலர், முடிவெடுத்துள்ளதாக தெரிய வருகிறது.

ரிலையன்ஸ் ஜியோ, பாரத் ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகியவற்றுக்கு மாற்றாக, BSNL-மாற இருப்பதாகவும் பதிவிட்டு வருகிறார்கள். இதன் வெளிப்பாடாகவே , ‘JioBoycott’ இணையாக, ‘BSNLkigharwapsi’ ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

எனவே , ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வால் பாதிப்படைந்தவர்கள், 5G இணைப்பையும் விட்டுவிட தயாராக இருப்பதாக தெரியவருகிறது .

Tags: Boycott hashtag is trending against recharge hike!
Share
Tweet
SendShare
Previous Post

சட்டசபைக்குள் புகையிலை கொண்டு சென்ற விவகாரம்! – தீர்ப்பு தள்ளிவைப்பு!

Next Post

சொத்துவரி செலுத்தாத 43 கடைகளுக்கு சீல்! – மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

Related News

டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதியமைச்சர்கள் மாநாடு – மரிய வில்சன் பங்கேற்பு!

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்; செப்.22ல் தொடங்கி வைக்கும் முதலமைச்சர்

தாய்மாமன் தங்க மோதிரம் சிறப்பு நலத்திட்டம்; செ.28ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

ஈரான் போரால் பெரும் இழப்பு : முதன்முறையாக உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன் – சிறப்பு தொகுப்பு!

திருப்பூரில் ஆகஸ்ட் மாத ஆடை ஏற்றுமதி ரூ.11,463 கோடியாக உயர்வு!

சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் : திருமலை தேவஸ்தான நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கோலாகலம் – 1,100 சிலைகள் கரைப்பு!

சென்னை தரமணியில் உலகளாவிய திறன் மையம் – முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் : 2 – ம் கட்டமாக தமிழகத்தில் 25000 வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல்!

இன்றைய தங்கம் விலை!

12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் – ஒரு மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு!

விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு பின்னர் குண்டு வெடிக்கும் – ஸ்ரீவில்லிபுத்தூரில் மிரட்டல் விடுத்த இளைஞர்களிடம் விசாரணை!

ஆட்டம் காட்டும் அமெரிக்கா : 100 % வரி மிரட்டல் : இந்தியாவுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக பாஜக உருவெடுக்கும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பரிவட்டம் – திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கு அனுப்பி வைப்பு!

டெங்கு சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies