வயநாடு நிலச்சரிவு!: உயிரிழந்தோர் எண்ணிக்கை 280-ஐ தாண்டியது!
Feb 4, 2026, 10:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வயநாடு நிலச்சரிவு!: உயிரிழந்தோர் எண்ணிக்கை 280-ஐ தாண்டியது!

Murugesan M by Murugesan M
Aug 1, 2024, 11:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 280-ஐ தாண்டியுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, முண்டக்கை, மேம்பாடி ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள பயங்கர நிலச்சரிவு மிகப்பெரிய பேரழிவாக மாறியுள்ளது. அதிலும் முண்டக்கை பகுதி மிகப்பெரிய அழிவை சந்தித்துள்ள நிலையில், நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. குடியிருப்புகள் இருந்த தடமே இல்லாமல் காட்சியளிக்கின்றன. முண்டக்கை பகுதியில் அனைத்து இடங்களும் மண், மரங்கள் மற்றும் பாறைகளால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

சூரல்மலை மற்றும் முண்டக்கை பகுதியில் மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில், வேடிக்கை பார்க்க வரும் பொதுமக்கள் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி 28 குழந்தைகள் உள்ளிட்ட 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், வயநாடு பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், வயநாடு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

வயநாட்டில் விடாது பெய்து வரும் கனமழையால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, குரும்பலாக்கோட்டை, லக்கிடி, மணிக்குன்னு மலை, கபிக்களம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் முகாம்களுக்கு செல்லுமாறு வயநாடு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனிடையே, கோழிக்கோடு மாவட்டம் விளங்காடு பகுதியில் உள்ள நிவாரண முகாமை பார்வையிட மாவட்ட ஆட்சியர் சென்றபோது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கிய ஆட்சியரை, மீட்பு படையினரின் கயிறு கட்டி மீட்டனர்.

இந்நிலையில், வயநாடு மாவட்டத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். கோழிக்கோட்டில் இருந்து வயநாட்டிற்கு ஹெலிகாப்டரில் சென்ற முதலமைச்சர் பினராயி விஜயன், பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். அவருடன் தலைமைச் செயலாளர் வேணு, டிஜிபி ஷேக் தர்வேஷ் சாஹிப் ஆகியோர் உடன் சென்றனர்.

Tags: Wayanad Landslide!: The death toll exceeds 280!
ShareTweetSendShare
Previous Post

ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு!

Next Post

வயநாடு நிலச்சரிவு! : ரஷ்ய அதிபர் புதின் இரங்கல்!

Related News

இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றன – பியூஷ் கோயல்

மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ-க்கள் குழு தலைவராக யெம்நம் கெம்சந்த் சிங் தேர்வு – விரைவில் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்!

இன்றைய தங்கம் விலை!

மும்பை விமான நிலையத்தில் இரு விமானங்களின் இறக்கைகள் உரசி விபத்து – பயணிகள் பத்திரமாக மீட்பு!

தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை- இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு : அச்சத்தில் பாகிஸ்தான்!

இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் : பாகிஸ்தான் வங்கதேச வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிரம்ப் சிறுமியை வன்கொடுமை செய்ததாக எப்ஸ்டீன் கோப்பில் தகவல்!

மக்களவையில் அமளி – எதிர்க்கட்சிக எம்பிக்கள் 8 பேர் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம்!

சபரிமலை தங்கம் திருட்டு சம்பவம் – பாஜக போராட்டம்!

மாணவர்கள் உயரும் போது நாடும் உயரும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்து சமய அறநிலைய துறைக்கு அபராதம் -சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகல் – அண்ணாமலை விளக்கம்!

தூய்மை பணியாளர் பத்மாவுக்கு தங்கச்சங்கிலியை பரிசளித்த ரஜினிகாந்த்!

வீட்டின் பூட்டை உடைக்க முடியாததால் ஆத்திரத்தில் திருடர்கள் செய்த அதிர்ச்சி செயல்

திமுகவின் ஆட்சிக்கு தமிழக மக்கள் அனைவருமே எதிரியாக இருக்கின்றனர் – நயினார் நாகேந்திரன்

அரசு பணி ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு – போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ ஆய்வு நிபுணர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies