வயநாடு நிலச்சரிவு!: உயிரிழந்தோர் எண்ணிக்கை 280-ஐ தாண்டியது!
Jul 27, 2025, 07:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வயநாடு நிலச்சரிவு!: உயிரிழந்தோர் எண்ணிக்கை 280-ஐ தாண்டியது!

Web Desk by Web Desk
Aug 1, 2024, 11:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 280-ஐ தாண்டியுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, முண்டக்கை, மேம்பாடி ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள பயங்கர நிலச்சரிவு மிகப்பெரிய பேரழிவாக மாறியுள்ளது. அதிலும் முண்டக்கை பகுதி மிகப்பெரிய அழிவை சந்தித்துள்ள நிலையில், நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. குடியிருப்புகள் இருந்த தடமே இல்லாமல் காட்சியளிக்கின்றன. முண்டக்கை பகுதியில் அனைத்து இடங்களும் மண், மரங்கள் மற்றும் பாறைகளால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

சூரல்மலை மற்றும் முண்டக்கை பகுதியில் மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில், வேடிக்கை பார்க்க வரும் பொதுமக்கள் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி 28 குழந்தைகள் உள்ளிட்ட 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், வயநாடு பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், வயநாடு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

வயநாட்டில் விடாது பெய்து வரும் கனமழையால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, குரும்பலாக்கோட்டை, லக்கிடி, மணிக்குன்னு மலை, கபிக்களம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் முகாம்களுக்கு செல்லுமாறு வயநாடு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனிடையே, கோழிக்கோடு மாவட்டம் விளங்காடு பகுதியில் உள்ள நிவாரண முகாமை பார்வையிட மாவட்ட ஆட்சியர் சென்றபோது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கிய ஆட்சியரை, மீட்பு படையினரின் கயிறு கட்டி மீட்டனர்.

இந்நிலையில், வயநாடு மாவட்டத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். கோழிக்கோட்டில் இருந்து வயநாட்டிற்கு ஹெலிகாப்டரில் சென்ற முதலமைச்சர் பினராயி விஜயன், பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். அவருடன் தலைமைச் செயலாளர் வேணு, டிஜிபி ஷேக் தர்வேஷ் சாஹிப் ஆகியோர் உடன் சென்றனர்.

Tags: Wayanad Landslide!: The death toll exceeds 280!
ShareTweetSendShare
Previous Post

ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு!

Next Post

வயநாடு நிலச்சரிவு! : ரஷ்ய அதிபர் புதின் இரங்கல்!

Related News

எளிமையின் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் அப்துல் கலாம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு தினம் – பனை விதைகளை நட்ட கல்லூரி மாணவர்கள்!

தமிழகத்தில் ராஜராஜ மற்றும் ராஜேந்திர சோழனுக்கு சிலை – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

கங்கை நீரை கொண்டு வந்தது மூலம் வரலாற்றில் இடம் பிடித்தார் பிரதமர் மோடி – அண்ணாமலை

சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம் – பிரதமர் மோடி புகழாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – காவல்துறை விசாரணை!

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies