அறிவுசார் அடையாளம் சென்னை பல்கலைக்கழகம் உருவான தினம் இன்று!
Jan 18, 2026, 04:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அறிவுசார் அடையாளம் சென்னை பல்கலைக்கழகம் உருவான தினம் இன்று!

Murugesan M by Murugesan M
Sep 5, 2024, 11:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு  தாய் பல்கலைக்கழகமாக திகழும் சென்னைப் பல்கலைக்கழகம் உருவான தினம் இன்று. நாட்டை கட்டியமைக்கும் பணியில் மைல்கல்லாக திகழ்ந்து வரும் சென்னைப் பல்கலைக்கழகம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

இன்றைய தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் என பல்வேறு மாநிலங்களை உள்ளடக்கிய அன்றைய சென்னை மாகாண மாணவர்களின் உயர்கல்வித் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கடந்த 1857ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி தொடங்கப்பட்டது தான் இந்த சென்னைப் பல்கலைக்கழகம். ஏராளமான கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்கள் என பல வல்லுநர்களை அடையாளம் காட்டிய சென்னைப் பல்கலைக்கழகம் உருவான தினம் இன்று..

துறைரீதியான படிப்புகளுக்கு தனித்தனியாக பல்கலைக்கழகங்கள் தற்போது இருக்கும் நிலையில், முன்பு மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய பல்கலைக்கழகமாக சென்னைப் பல்கலைக்கழகம் ஒன்று மட்டுமே திகழ்ந்தது.

தமிழகத்தில் பல்கலைக்கழகம் என்று சொன்னாலே முதலில் நினைவுக்கு வருவது சென்னைப் பல்கலைக்கழகம் தான் என்று பெருமிதம் பொங்க கூறுகிறார் அதன் முன்னாள் மாணவரும, இந்நாள் பேராசிரியருமான ஜெய் சக்திவேல்.

டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணன், கே.ஆர்.நாராயணன் உட்பட ஆறு குடியரசுத் தலைவர்கள், நோல்பரிசு பெற்ற சர்.சி.வி. ராமன், இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி கே.சுப்பாராவ், என எண்ணற்ற அறிஞர்களையும், ஆட்சியாளர்களையும் உருவாக்கிய பெருமையை கொண்டிருக்கும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இன்றளவும் தரமான கல்வி கிடைப்பதாக கூறுகிறார் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையின் ஆராய்ச்சி மாணவர் தீப்தி

121 இணைப்புக் கல்லூரிகள், சேப்பாக்கம், கிண்டி, மெரினா, தரமணி, சேத்துப்பட்டு என் ஐந்து வளாகங்கள், 32 துறைகள் என நூற்றாண்டுகளை கடந்தும் சென்னைப் பல்கலைக்கழகம் தனித்துவமிக்கதாக திகழ்ந்து வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் இருக்கும் நூலகம், புத்தக விரும்பிகளுக்கு மட்டுமல்லாமல், ஆராய்ச்சி மாணவர்களின் அறிவுசார் தேடல்களுக்கும் துணையாக இருக்கிறது.

சமூகநீதி அடிப்படையில் அனைவருக்கும் சமமான, தரமான கல்வியை வழங்கிக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களுக்கு முன்னோடியாக திகழும் சென்னைப் பல்கலைக்கழகம், எதிர்கால இளைய சமுதாயத்தின் வழிகாட்டியாகவும் திகழ்ந்து வருகிறது.

 

Tags: madras universityCHENNAI UNIVERSITYChennai Province
ShareTweetSendShare
Previous Post

வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

Next Post

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் – பிரதமர் மோடிக்கு நிர்மலா சீதாராமன் நன்றி!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies